தமிழ்நாடு

tamil nadu

திருப்பத்தூரில் ஓடும் பேருந்தில் ஏற முயன்ற நபர் கீழே விழுந்து விபத்து.. வெளியான சிசிடிவி காட்சிகள்! - TIRUPAThUR ACCIDENT

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 1:49 PM IST

திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த வரதபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (36). இவர் பெங்களூரில் பணிபுரிந்து வரும் நிலையில், ஆறுமுகம் தனது உறவினர் வீட்டில் ஏற்பட்ட துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பெங்களூரில் இருந்து திருப்பத்தூருக்கு வந்துள்ளார்.

அப்போது, அண்ணா நகர் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த போது அங்கு வந்த அரசுப் பேருந்தை நிறுத்தி, ஆறுமுகம் ஏற முற்படும்போது திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்ததில் ஆறுமுகத்தின் இடுப்பு பகுதியில் பேருந்தின் பின் டயர் ஏறி இறங்கி உள்ளது. 

இதனால் இடுப்பு பகுதியில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை மீட்ட அப்பகுதி மக்கள், அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, ஆறுமுகம் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அரசுப் பேருந்தில் ஏற முற்படும்போது தவறி விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details