தமிழ்நாடு

tamil nadu

பறக்கும் படை சோதனைகள் தீவிரம்..! குமரி மாவட்டத்தில் மட்டும் ரூ.9 லட்சத்துக்கு மேல் பறிமுதல்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 1:40 PM IST

Unaccounted money seized: கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட வாகன சோதனையில் தற்போது வரை உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக 9 லட்சத்திற்கு மேற்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Unaccounted money seized in Kanniyakumari
Unaccounted money seized in Kanniyakumari

கன்னியாகுமரி: நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல், தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதல், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

அந்தவகையில், தேர்தல் விதிமீறல்களை தடுக்கவும், பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வழங்குதல் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் தொகுதி வாரியாக பரக்கும் படை பணியமர்த்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் 18 பறக்கும் படை சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது ராஜாக்கமங்கலம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்ட போது, உரிய ஆவணம் இல்லாமல் 1லட்சத்து 15 ஆயிரத்து 900 ரூபாய் பணத்தை ஆனந்த நகரைச் சேர்ந்த தனசேகர் என்பவரிடம் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் ஆரல்வாய்மொழி மொழி பகுதியில் வாகன சோதனைகளில் ஈடுபட்டபோது நாங்குநேரியைச் சேர்ந்த அரவிந்த் என்பவரிடம் இருந்து 1 லட்சத்து 25 ஆயிரத்து 600 ரூபாயும், பத்மநாபபுரம் பகுதியில் மேற்கொண்ட சோதனையில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 450 ரூபாயும், குளச்சல் பகுதியில் நடைபெற்ற சோதனையில் ஏடிஎம் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 742 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அந்த தொகுதி முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வட்டாட்சியர் லீலா தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் மார்த்தாண்டம் சந்தை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த மீன் வண்டியை சோதனை செய்ததில் அதில் உரிய ஆவணம் இல்லாத 1 லட்சத்து 23 ஆயிரத்து 200 ரூபாய் பணம் மற்றும் பணத்தை கொண்டு வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் 9 லட்சத்து 75 ஆயிரத்து 942 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:ஜாபர் சாதிக் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு!

ABOUT THE AUTHOR

...view details