சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்தநாளையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில், திமுகவின் 520 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல், 500 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, 72 மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்று, அமைச்சர்கள் உதயநிதி மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
முன்னதாக விழா மேடையில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி, சிறப்பான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அடுத்த நான்கு நாட்களில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். மத்திய சென்னையில் பிரச்சாரம் ஏற்கனவே முடிந்துவிட்டது. வேட்பாளர் யார் என்று உங்களுக்கே தெரியும். கடந்த முறை பெற்ற வாக்குகளை விட, அதிக வாக்கு வித்தியாசத்தில் தயாநிதி மாறனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தில் பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். பெண்களுக்கு மட்டும் இல்லை, கல்லூரிக்குச் செல்லும் ஆண்களுக்கும் 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 17 லட்சம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பயன்பெறுகிறார்கள்.