தமிழ்நாடு

tamil nadu

கவனக்குறைவால் ரயில் மோதி 2 இளைஞர்கள் பலி.. சென்னை குரோம்பேட்டையில் நிகழ்ந்த சோகம்! - chennai train accident

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 12:11 PM IST

Youths killed in train accident: சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர்கள் மீது அடுத்தடுத்து ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

Youths died in train accident
Youths died in train accident

சென்னை: குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே, தண்டவாளத்தில் இரண்டு இளைஞர்கள் உடல்கள் கிடப்பதாக இருப்புப்பாதை போலீசாருக்கு நேற்று (புதன்கிழமை) இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு இருப்புப்பாதை போலீசார் விரைந்து சென்றனர்.

மேலும், இறந்து கிடந்த இளைஞர்களில் உடல்களை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், நேற்றிரவு கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதியதில் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.

உயிரிழந்தவர்களுள் ஒருவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வந்த சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ் என்பதும், மற்றொருவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரனவ் என்பதும் தெரியவந்தது. இருவரும் நேற்றிரவு தங்களது பணியை முடித்துவிட்டு செல்லும் போது கவனக்குறைவாக தண்டாவாளத்தை கடக்க முயன்றுள்ளனர்.

அப்போது, அசாம் மாநிலம் டின்சுகியாவில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் அடுத்தடுத்து இருவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக ரயில்வே இருப்புப்பாதை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தெலங்கானா ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து - 5 பேர் பலி! பலி எண்ணிக்கை உயரும் அபாயம்?

ABOUT THE AUTHOR

...view details