தமிழ்நாடு

tamil nadu

"இன்றைய நாள் நம்ம கண்ரோல்ல இருக்கு"..வாக்களித்த பின் நடிகை ரம்யா பாண்டியன் பேட்டி.! - Tamil Nadu Lok sabha Election 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 4:02 PM IST

நமக்கான தலைவரை நாம் தான் தேர்வு செய்ய வேண்டும் எனவும், கட்டாயம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் நடிகை ரம்யா பாண்டியன் தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:வாக்களித்தப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரம்யா பாண்டியன், வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமை எனவும், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியமான விஷயம் எனவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று காலை முதல் நாடாளுமன்ற மக்களவை தொகுதிக்கான தேர்தல் வாக்குப் பதிவு விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையின் பல்வேறு வாக்குச்சாவடிகளில் பிரபலங்கள் பலர் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதி வாக்குச்சாவடியில் நடிகை ரம்யா பாண்டியன் தனது வாக்கினை பதிவு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அவர், "நமது கண்ட்ரோலில் இல்லாத நிறைய விஷயங்களை பற்றி பேசுகிறோம், குறை கூறுகிறோம், ஆனால் இன்றைய நாள் நமது கண்ட்ரோலில் உள்ளது. அதனால் அனைவரும் கண்டிப்பாக வாக்கு செலுத்த வேண்டும்". என தெரிவித்தார்.

மேலும், நமக்கு தேவையான தலைவரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய நாள் இந்த நாள் எனவும், இதனை பொதுமக்கள் கண்டிப்பாகத் தவற விடக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்த முடியாது ஆனால் அனைவரும் வாக்குச் செலுத்த வேண்டும் என்பதை நாம் வலியுறுத்த வேண்டும் எனவும் ரம்யா பாண்டியன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:வாக்காளர்களுக்கு விஜயின் அன்பு வேண்டுகோள்.. வாக்களித்தபின் எக்ஸ் பதிவு! - Tamil Nadu Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details