தமிழ்நாடு

tamil nadu

சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் கவனத்திற்கு.. வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 4:42 PM IST

Tamil Nadu Special Buses: வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழ் நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலமாகச் சிறப்புப் பேருந்து இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

tn-state-express-transport-corporation-announcement-special-buses-run-to-weekends
சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் கவனத்திற்கு.. வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை: சிறப்பு பேருந்துகள் அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (மார்ச்.15) 360 பேருந்துகளும், நாளை மறுநாள் (மார்ச்.16) 420 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (மார்ச்.15) 70 பேருந்துகளும், நாளை மறுநாள் (மார்ச்.16) 70 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மார்ச்.17ஆம் தேதி சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்புவதற்கு வசதியாகப் பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை (மார்ச்.15) பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 4,519 பயணிகளும், சனிக்கிழமை (மார்ச்.16) 1,710 பயணிகள் மற்றும் ஞாயிற்று கிழமை அன்று (மார்ச்.17) 4,142 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும், அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினைப் பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஓட்டுக்கு பணம் பெற்றால் என்ன தண்டனை தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details