தமிழ்நாடு

tamil nadu

நாங்குநேரி அருகே விபத்து: அண்ணன் தம்பி உட்பட 3 இளைஞர்கள் பலி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 3:00 PM IST

Nanguneri highway accident : நாங்குநேரியில் உணவருந்தி விட்டு ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த 3 இளைஞர்கள், கார் மோதி சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

நெல்லை நெடுச்சாலையில் விபத்து
நெல்லை நெடுச்சாலையில் விபத்து

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஸ்ரீரங்க ராஜபுரத்தை சேர்ந்தவர் மகேஷ்(27). மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அவினாபேரியை சேர்ந்தவர்கள் மாலை ராஜா மற்றும் சண்முகவேல். இவர்கள் மூவரும் நாங்குநேரி அருகே உள்ள நெடுங்குளத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு நாங்குநேரி பகுதியில் உணவு அருந்திவிட்டு மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் நெடுங்குளம் நோக்கி பயணித்துள்ளனர். அப்போது நாங்குநேரி அருகே உள்ள தாளைகுளத்தில் நான்கு வழி சாலையை கடக்க முயன்ற பொழுது திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற சொகுசு கார் இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் மகேஷ் மற்றும் மாலை ராஜா ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சண்முகவேல் படுகாயத்துடன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை சண்முகவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த மாலை ராஜா மற்றும் சண்முகவேல் இருவரும் சகோதரர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க:வணிக சிலிண்டருக்கான விலை அதிகரிப்பு.. சென்னையில் ஒரு சிலிண்டர் எவ்வளவு?

ABOUT THE AUTHOR

...view details