தமிழ்நாடு

tamil nadu

நடுக்கடலில் தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர்.. 2 மீனவர்கள் மருத்துமனையில் அனுமதி! - Rameshwaram Fishermen attacked

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 12:44 PM IST

Rameshwaram Fishermen attacked: எல்லைத் தாண்டி மீன் பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

RAMESHWARAM FISHERMEN ATTACKED
RAMESHWARAM FISHERMEN ATTACKED

ராமநாதபுரம்:புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

இது மட்டும் அல்லாது கடல் கொள்ளையர்களைப் போல் தமிழக மீனவர்களின் படகுகளையும், மீன் வலைகளையும் பறிமுதல் செய்யும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. இதனை முற்றிலுமாக தடுக்க வேண்டும், தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும், மீனவர்கள் தாக்கக் கூடாது என இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு பலரும் கோரிக்கை வைத்து வருகின்றன.

ஆனாலும் மீனவர்களுக்கான அச்சுறுத்தல்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளது. இந்தநிலையில் நேற்று (திங்கட்கிழமை) ராமநாதபுரத்தை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 338 விசைப்படகுகள் மூலம் மீன் பிடிப்பதற்காக உரிய அனுமதி பெற்று கடலுக்கு சென்றுள்ளனர்.

இவர்கள் இந்திய எல்லைப் பகுதியான நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 50 மேற்பட்ட மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தாக கூறப்படுகிறது. மேலும் தங்கச்சிமடத்தை சேர்ந்த சேசு ராஜா என்பவரின் சொந்தமான படகை கற்கள் மற்றும் கட்டைகளைக் கொண்டு இலங்கை கடற்படையினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் ராமேஸ்வரம் முத்துராமலிங்க தேவர் நகரை சேர்ந்த ராஜா, மீனவர் மெக்கான்ஸ் என்ற இரண்டு மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நள்ளிரவு ராமேஸ்வரம் துறைமுகத்துக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து காயமடைந்த இரண்டு மீனவர்களும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன.

இந்த சம்பவத்துக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இலங்கை கடற்படை மீது வழக்கு தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:"பிடிபட்ட 4 கோடி என்னுடைய பணம்" - ஒப்புக்கொண்ட நடிகர் மன்சூர் அலிகான்!

ABOUT THE AUTHOR

...view details