தமிழ்நாடு

tamil nadu

ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரை விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம்! - Rameswaram Fishermen Released

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 6:16 PM IST

24 Rameswaram Fishermen Released: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 25 ராமேஸ்வரம் மீனவர்களில் 24 பேரை விடுதலை செய்தும் அதில் படகோட்டியான ஒருவருக்கு மட்டும் ஆறு மாதம் சிறைத் தண்டனை விதித்தும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

24 Rameswaram Fishermen Released
24 Rameswaram Fishermen Released

சென்னை: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 21ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்த மூன்று விசைப்படகையும் அதிலிருந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றச்சாட்டை முன்வைத்து கைது செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, அவர்களைச் சிறையில் அடைத்து, விசாரணை மேற்கொண்டனர். அதனை அடுத்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, 25 ராமேஸ்வரம் மீனவர்களும், இலங்கை ஊர்க் காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், பிடிபட்ட 25 ராமேஸ்வரம் மீனவர்களையும் ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி வரை, அதாவது இன்று வரை சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, அவர்கள் 25 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இத்தகைய சூழலில், மீனவர்களின் சிறை காவல் இன்றுடன் (ஏப்.04) முடிந்ததை அடுத்து, இலங்கை ஊர்க் காவல்துறை நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, கைது செய்யப்பட்ட 25 மீனவர்களில், 24 பேரை மட்டும் விடுதலை செய்தும் அதில் படகோட்டியான ஒருவருக்கு மட்டும் ஆறு மாதம் சிறைத் தண்டனை விதித்தும் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள 24 மீனவர்களும், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு தினங்களில் தமிழகம் திரும்புவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சேற்றுக் குளியல் அப்புறம் ஷவர் குளியல்.. கோடையை சமாளிக்க யானைகளுக்கு சிறப்பு ஏற்பாடு!

ABOUT THE AUTHOR

...view details