மயிலாடுதுறை:மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி மயிலாடுதுறையில் தேர்தல் நாளன்று (ஏப்ரல் 19) மகாதானத் தெரு டிபிடிஆர் தேசிய துவக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் 143, 144-இல் வாக்காளர் பட்டியலில் 400-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. மகாதானத் தெரு, பட்டமங்கலத்தெரு உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த வாக்காளர்கள் இதனை அறியாமல் ஓட்டுப்போட வந்தபோது தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இருந்து தங்களது பெயர்கள் நீக்கப்பட்டதை கண்டித்தும், தங்களுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கக் கோரியும், மகாதானத் தெரு டி.பி.டி.ஆர். தேசிய துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி முன்பு மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் உள்ளிட்ட 100-க்கும் மேலோனார் தேர்தலின் போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: "வெற்றி பெற்றால் 60 நாட்களில் அனைத்தையும் நிறைவேற்றுவேன்" - மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் உறுதி! - Lok Sabha Election 2024