தமிழ்நாடு

tamil nadu

“நிர்மலா சீதாராமனின் பையிலும், படுக்கையறையிலும் பணம் இருப்பது அனைவருக்கும் தெரியும்” - ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம்! - evks elangovan

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 29, 2024, 6:37 PM IST

EVKS Elangovan: தேர்தல் ஆணையம் மோடியின் கொத்தடிமையாக, கைப்பாவையாக செயல்படுகிறது எனவும், ஜனநாயக விரோதமான காரியத்தை மோடி அன்ட் கோ செய்கிறார்கள் என எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

evks elangovan
evks elangovan

evks elangovan

ஈரோடு:ஈரோட்டில் திருமகன் ஈவெரா சாலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேர்தல் ஆணையம் மோடியின் கொத்தடிமையாக, கைப்பாவையாக செயல்படுகிறது என்றார்.

மேலும், “கோவையில் அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்யும்போது பல தவறுகள் செய்துள்ளார். கேட்ட விவரங்களை முழுமையாக கொடுக்கவில்லை. எந்த தொகுதியில் வாக்காளராக இருக்கிறார் என்று வேட்புமனுவில் விவரம் தாக்கல் செய்யவில்லை. இதற்கு அனைத்து வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் அதிகாரிடம் புகார் தெரிவித்தனர்.

அப்போது, டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் இருந்து செல்போன் மூலம் தகவல் வந்ததால், வேட்புமனு ஏற்றுக் கொள்வதாக கோவை தேர்தல் அலுவலர் தெரிவித்தார்” என்றார். அதனைத் தொடர்ந்து பேசியவர், “தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை ஏற்பதோடு மட்டுமல்லாமல், சின்னங்களை உடனே தருகிறது. திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள், மதிமுகவிற்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனுவை பத்து மணிநேரம் காலதாமதத்திற்கு பிறகு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மோடி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கூடுதல் சம்பளம் வழங்குவதாக தேர்தல் ஆணையத்தின் மூலம் அறிவித்துள்ளது. இப்படி அறிவிக்கக் கூடாது என்ற நிலையில், இப்படி அறிவிப்பது அயோக்கியத்தனம். தேர்தல் விதிமீறல்கள் தெரியாத பிரதமர் இருப்பது துர்திஷ்டமான விஷயம். இது அப்பட்டமான விதிமுறை மீறல்.

கையில் காசில்லை, அதனால் போட்டியிடவில்லை என நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். அவர் பையிலும், படுக்கையறையிலும் பணம் இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது என அமெரிக்கா, ஜெர்மனி வெளிப்படையாக தெரிவித்துள்ளது. இதனை நிர்மலா சீதாராமன் கணவரும் ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் முடிவுகள் முதலமைச்சர் ஸ்டாலின் கரங்களை பலப்படுத்தும் தேர்தலாக இருக்கும். கடந்த தேர்தலில் நான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்த நிலையில், இந்த முறை அனைத்து தொகுதியும் வெற்றி பெறுவது உறுதி. இந்தியாவில் ஜனநாயகம் பெயரளவிலேயே உள்ளது. ஜனநாயக விரோதமான காரியத்தை மோடி அன்ட் கோ செய்கிறார்கள்.

போதைப்பொருள் எம்ஜிஆர் காலத்தில் இருந்து வருகிறது. எம்ஜிஆர் அமைச்சரவையில் இருந்த போது, அமைச்சர் ஒருவர் போதைக்கு அடிமையாக இருந்த வரலாறு உண்டு. போதைப்பொருட்கள் குஜராத் அதானி துறைமுகத்தில் இருந்து மும்பை,டெல்லிக்கு கடத்தல் சம்பவம் நிகழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இளைஞர்கள் மத்தியில் போதை கலாச்சாரம் வருவதற்கு காரணம் அமித்ஷா, மோடி தான். குஜராத் மாநிலத்தில் மோடி, அமித்ஷா உத்தமர்கள். குஜராத் மாநிலத்தில் முழுமையாக மதுவிலக்கு அமல்படுத்தினால், தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்துவேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க பாடுபடுவேன்".. சௌமியா அன்புமணி பிரச்சாரத்தில் பேச்சு! - Sowmiya Anbumani Election Campaign

ABOUT THE AUTHOR

...view details