சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்று (பிப்.22) காலை ஃப்ளை துபாய் ஏர்லைன்ஸ் (Fly Dubai Airlines) பயணிகள் விமானம் துபாய் புறப்படத் தயாரானது. இதற்கிடையே, அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பிக் கொண்டு இருந்தனர். அப்போது, ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த ரோஜா (40) என்ற பெண், சுற்றுலாப் பயணி விசாவில் துபாய் செல்வதற்காக வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்ததை அடுத்து, அவரை நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து, அதிகாரிகள் அவருடைய கைப்பையை சோதித்துள்ளனர். அப்போது, அந்த பெண் பயணியின் கைப்பைக்குள் இருந்த பார்சலில் 68 சிம் கார்டுகள் இருந்ததைக் கண்டு, அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவை அனைத்தும் ஒரே தொலைத்தொடர்பு நிறுவனத்துடையது என்பதும், அந்த சிம் கார்டுகள் ஆக்டிவேஷன் செய்யப்படாமல் புதிதாக இருந்ததும் சோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த சிம் கார்டுகள் கவர்களுடன் இருந்தால் பார்சல் பெரிதாகத் தெரிந்து, சுங்கச் சோதனையில் கண்டுபிடித்து விடுவார்கள் எனக் கருதி, அனைத்து சிம் கார்டுகளும் கவர்களில் இருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்தப் பெண் பயணியை தனியே அழைத்து, பெண் சுங்க அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போதும் அந்தப் பெண் முன்னுக்குப் பின் முரணாகவே பதில் கூறியுள்ளார். அதில் அவர், "இந்த சிம் கார்டுகளுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் சென்னை விமான நிலையத்தில் வந்து நின்றபோது, ஒருவர் வந்து இந்த பார்சலை எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறினார்.