தமிழ்நாடு

tamil nadu

பிப்.26-இல் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 10:10 AM IST

I Periyasamy: வீட்டு வசதி வாரிய வீட்டை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிப்ரவரி 26ஆம் தேதி தீர்ப்பளிக்க உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
ஐ பெரியசாமி

சென்னை: கடந்த 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, அமைச்சர் ஐ.பெரியசாமி ஒதுக்கீடு செய்து முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கை தாமாக முன்வந்து, மறுஆய்வு வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த வழக்கில், பிப்ரவரி 13ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வரும் பிப்ரவரி 26ஆம் தேதி தீர்ப்பளிக்க உள்ளார். முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட 6 மறு ஆய்வு வழக்குகளில், முழுவதும் விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட உள்ள முதல் வழக்காக அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 6 கோயில்களில் ரோப்கார் வசதி" - அமைச்சர் சேகர்பாபு முக்கிய தகவல்

ABOUT THE AUTHOR

...view details