தமிழ்நாடு

tamil nadu

"மின் விளக்கு, பஸ் உள்ளிட்ட வசதிகள் இல்லை" - கரூரில் ஆய்வுக்கு சட்டப்பேரவை பொது கணக்கு குழுவிடம் முறையிட்ட மாணவிகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 9:16 PM IST

கரூரில் ஆய்வுக்கு வந்த தமிழக சட்டப்பேரவை பொது கணக்கு குழுவிடம் அடிப்படை வசதி இன்றி தவிப்பதாக புகாரளித்த பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் தங்கிப் பயிலும் கல்லூரி மாணவிகள், கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு முறையிட்டனர்.

legislative assembly accounts committee inspection at karur
கரூரில் சட்டப் பேரவை கணக்குக் குழு ஆய்வு

கரூரில் சட்டப் பேரவை கணக்குக் குழு ஆய்வு

கரூர்:தமிழக சட்டப்பேரவை பொது கணக்கு குழு, தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் கரூர் மாவட்டத்தில் இன்று (ஜன.30) பல்வேறு திட்டப் பணிகளை கள ஆய்வு செய்தனர். அந்த வகையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு செய்த தமிழக சட்டப்பேரவை பொது கணக்கு குழு, வெங்ககல்பட்டியில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியையும் ஆய்வு செய்தனர்.

அதில் விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது, அந்த விடுதியில் தங்கிப் பயிலும் கரூர் தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரி மாணவிகள், தமிழக சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் கு.செல்வபெருந்தகையிடம், விடுதிக்கு வரும் வழியில் சாலை வசதி மற்றும் மின்விளக்கு வசதி இல்லை என்றும் அதனை அமைத்துத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், அரசு பேருந்துகள் கூட நின்று செல்வது இல்லை என வேதனை தெரிவித்த மாணவிகள், காவிரி குடிநீர் இல்லாததால் உப்பு நீரைப் பருக வேண்டி உள்ளது என அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என முறையிட்டனர்.

இதையடுத்து, மாணவிகளின் கோரிக்கைகள் அனைத்தும் உடினடியாக நிறைவேற்றி தரப்படும் என தமிழக சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையிலான குழு உறுதியளித்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மண்மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி, புகழூர் நகராட்சி அலுவலகம் ஆகிய பகுதிகளில் ஆய்வு நடைபெற்றது.

இந்த ஆய்வின்போது, பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, புகலூர் நகராட்சி தலைவர் சேகர், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, வட்டாட்சியர்கள் முருகன், குமரேசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை..! கேரளாவில் நீதிமன்றம் அதிரடி

ABOUT THE AUTHOR

...view details