தமிழ்நாடு

tamil nadu

உலக தாய்மொழி தினம்; மெஹந்தி மூலம் தமிழின் சிறப்புகளை எடுத்துரைத்த தஞ்சை கல்லூரி மாணவிகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 12:51 PM IST

International Mother Language Day: உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள், கைகளில் மெஹந்தி இட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

International Mother Language Day
உலக தாய்மொழி தினம்

உலக தாய்மொழி தினம்

தஞ்சாவூர்: அனைத்து மக்களின் தாய்மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், பிப்ரவரி 21ஆம் தேதியை ‘உலக தாய்மொழி தினமாக’ யுனெஸ்கோ (UNESCO) 1999ஆம் ஆண்டு அறிவித்தது. அதன்படி, 2000ஆம் ஆண்டிலிருந்து பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக தாய்மொழி தினத்தின் முக்கியத்துவத்தை, இன்றைய இளைய தலைமுறையினரும் எடுத்துரைக்கும் விதமாக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தஞ்சாவூரில் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் உலக தாய்மொழி தினம் பிப்ரவரி 21ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

இதில், “தமிழுக்கு கை கொடுப்போம்” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மெஹந்தி போட்டியில், 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கு பெற்று, தமிழின் சிறப்புகளை கலைத்திறனாக வெளிப்படுத்தினர். மேலும் அருந்தமிழ், அழகுத்தமிழ், தனித்தமிழ், மாத்தமிழ் உள்ளிட்ட தமிழின் சிறப்புகளை எடுத்துரைக்கும் திருவள்ளுவர், பாரதியார், ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம், ஏர் உழவன், காளை உள்ளிட்ட வடிவங்களை தங்கள் கரங்களில் மெஹந்தி கொண்டு வரைந்திருந்தனர்.

இப்போட்டியை கல்லூரி நுண்கலைத்துறை பேராசிரியர்கள் தமிழடியான், கரிகாலன் உள்ளிட்ட தேர்வுக் குழுவினர் பார்வையிட்டு, அழகிய கலைத்திறனுடன் தமிழ்ப் பற்றை கைகளில் மெஹந்தி மூலம் வெளிப்படுத்திய மாணவிகளை பாராட்டி, அவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

இது குறித்து கல்லூரி மாணவி காவியா கூறுகையில், “எங்கள் கல்லூரியில் தமிழைப் போற்றும் வகையில், உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்களுக்கு தமிழ் மொழிப் பற்று அதிகரிக்கும் வகையில் இந்த மெஹந்தி போட்டி அமைந்துள்ளது. தமிழை அனைத்து செயல்களிலும் முன்னிலைப்படுத்த வேண்டும். தமிழ் மொழியை அழியாமல் காத்திட வேண்டும். ஆங்கில மோகத்தை தவிர்த்து, தமிழ் மொழியை பின்பற்ற வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:நாடாளுமன்ற தேர்தல்: சென்னையில் இன்றும், நாளையும் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details