வேலூர்:நாடளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடுமுழுவதும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும், தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சோதனைகள் தீவிரமடைந்துள்ளன.
இந்த நிலையில், வேலூர் மாவட்டம் அறங்காவலர் குழு தலைவரும், வேலூர் திமுக நகர பொருளாளருமான அசோகன் என்பவருக்கு சொந்தமான தோட்டப்பாளையம் பகுதியில் இருக்கும் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள், 4 பேர் கொண்ட குழு சுமார் நேற்றிரவு 2 மணி நேரத்துக்கு மேலாக சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அசோகனின் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரில் உள்ள ஆவணங்களை சோதித்த வருமானவரித்துறை அதிகாரிகள், சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாகவும், அந்த ஆவணங்கள் குறித்த தகவல்கள் வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு தெரியவரும் எனத் தகவல் வெளியாக உள்ளது.