தமிழ்நாடு

tamil nadu

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 23வது முறையாக நீட்டிப்பு..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 9:09 PM IST

Former Minister Senthil Balaji Case: சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 23வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Former Minister Senthil Balaji Case
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 23வது முறையாக நீட்டிப்பு

சென்னை: சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கும் வழங்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதனிடையே, புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 22வது முறையாக நீதிமன்றக் காவலை மார்ச் மாதம் 04-ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (மார்ச் 04) முடிவடைவதால், புழல் சிறையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (மார்ச் 04) மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி எஸ்.அல்லி, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மார்ச் மாதம் 6ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் காரணமாக, 23வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ரூ.40 கோடி நிதி இருக்கு: ஆனால் பலன் இல்லை! தமிழகத்தின் முதல் சித்த மருத்துவ கல்லூரியின் அவலம்

ABOUT THE AUTHOR

...view details