தமிழ்நாடு

tamil nadu

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 32வது முறையாக நீட்டிப்பு! - Former Minister Senthil Balaji Case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 5:09 PM IST

Former Minister Senthil Balaji Case: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 17ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Former Minister Senthil Balaji Case
Former Minister Senthil Balaji Case

சென்னை: சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கும் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இதனிடையே, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 31வது முறையாக நீதிமன்றக் காவலை ஏப்ரல் மாதம் 15ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (ஏப்.15) முடிவடைவதால், புழல் சிறையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (ஏப்.15) மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி எஸ்.அல்லி, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மார்ச் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டதன் காரணமாக, 32வது முறையாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அண்ணாமலையை சூழ்ந்த போலீசார்..சூலூரில் அண்ணாமலை உள்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details