தமிழ்நாடு

tamil nadu

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 27வது முறையாக நீட்டிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 18, 2024, 9:07 PM IST

Former Minister Senthil Balaji Case: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 27வது முறையாக நீட்டித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Former Minister Senthil Balaji Case
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 27வது முறையாக நீட்டிப்பு

சென்னை: சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கும் வழங்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதனிடையே, புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 26வது முறையாக நீதிமன்றக் காவலை மார்ச் மாதம் 18-ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (மார்ச் 18) முடிவடைவதால், புழல் சிறையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (மார்ச் 18) மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி எஸ்.அல்லி, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மார்ச் மாதம் 21ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் இல்லை எனக் கூறி, தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை இரு தரப்பு வழக்கின் வாதங்களுக்காக மார்ச் 21ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

இதுமட்டும் அல்லாது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மார்ச் மாதம் 21ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டதன் காரணமாக, 27வது முறையாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சென்னைக்கு அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் 12 மணிநேரமாக விசாரணை...

ABOUT THE AUTHOR

...view details