தமிழ்நாடு

tamil nadu

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நாளை ஒரு நாள் நீட்டிப்பு செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 9:02 PM IST

Chennai principle court extended judicial custody: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நாளை (பிப்.16) ஒரு நாள் நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai-principle-court-extended-judicial-custody-of-former-minister-senthil-balaji
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நாளை ஒரு நாள் நீட்டிப்பு செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு..

சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நாளை (பிப்.16) ஒரு நாள் நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

இதனிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (பிப் 15) முடிவடைவதால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நாளை வரை நீட்டித்து (பிப்ரவரி 16ஆம் தேதி) வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் 20வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுப் பதிவு நடைமுறையை நாளை (பிப்.16) மேற்கொள்ள உள்ளதால், ஒரு நாள் மட்டும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையின் வாதம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details