தமிழ்நாடு

tamil nadu

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறிந்து பணம் வசூலித்து வந்த கணவன் மனைவி கைது! - A husband and wife were arrested

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 10:59 PM IST

A Husband And Wife Were Arrested In Tirupattur: திருப்பத்தூர் அருகே கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என சட்டவிரோதமாகக் கண்டறிந்து பணம் வசூலித்து வந்த கணவன் மனைவி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

A Husband And Wife Were Arrested In Tirupattur
A Husband And Wife Were Arrested In Tirupattur

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பசுமை நகர்ப் பகுதியில் சட்ட விரோதமாகக் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து பணம் பறித்து வந்ததாக மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணைய இயக்குநர் கண்ணகிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பெயரில் மருத்துவ குழுவினர் பசுமை நகருக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது திருப்பத்தூர் அடுத்த ராச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்(29) மற்றும் அவருடைய மனைவி கங்கா கௌரி(27) ஆகிய இருவரும் பசுமை நகர்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் திருப்பத்தூர் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களிலிருந்து வரும் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சட்டவிரோதமாகக் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா எனப் பரிசோதித்து அவர்களிடம் பணம் வசூலித்து வந்ததும் தெரிய வந்தது.

இதன் காரணமாக ஜோலார்பேட்டை போலீசார் இருவரையும் கைது செய்து, கருவில் இருப்பது ஆணா, பெண்ணா எனக் கண்டறியும் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:இலங்கை அதிபர் இந்தியா வந்த போது பிரதமர் ஏன் கச்சத்தீவைப் பற்றி பேசவில்லை? - ஜெயகுமார் கேள்வி! - Kachchatheevu Issue

ABOUT THE AUTHOR

...view details