கரூர்: கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளர், ரவுடியுமான கருப்பத்தூர் கோபால் என்கின்ற கோபாலகிருஷ்ணன் என்பவரை அடையாளம் தெரியாத நபர்களால், கடந்த 2021 அக்டோபர் 6ஆம் தேதி அதிகாலையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து, லாலாபேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையிலான 3 பிரிவு தனிப்படைகள் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில், கொலை வழக்குத் தொடர்பாகத் திருநெல்வேலியைச் சேர்ந்த கூலிப்படைக்குத் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்த காவல்துறையினர், உறுதுணையாக இருந்த கரூர் லாலாப்பேட்டை கருப்பத்தூரைச் சேர்ந்த ராஜா(36), சரவணன்(31), ஜெயராமன் கம்மநல்லூர் சுரேஷ்(38), நந்தகுமார்(35), கருப்பு குமார் உள்ளிட்ட 11 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், உடல் நலக்குறைவு காரணமாகக் கருப்பு ரவி தவிர பத்து நபர்களைக் கைது செய்யப்பட்டு, வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று (பிப்.15) பிற்பகல் 1 மணியளவில், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் தீர்ப்பு வழங்கினார்.