கரூர்:கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில், இரண்டாவது அகில இந்திய அளவிலான பெண்கள் கூடைப்பந்து போட்டி, கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி 5 நாட்களாக லீக் மற்றும் நாக்கவுட் முறையில் நடைபெற்றது.
இப்போட்டியில், அகில இந்திய அளவில் தேர்வான கேரள மின்வாரிய அணி, சென்னை வருமான வரித்துறை அணி, குவாலியர் ஐடிஎம் பல்கலைக்கழகம் அணி (ITM University Gwalior), சென்ட்ரல் ரயில்வே மும்பை அணி (CR railway, Mumbai), சவுத் சென்ட்ரல் ரயில்வே செகந்திராபாத் அணி (South Central Railway, Secunderabad), இந்துஸ்தான் பல்கலைக்கழகம், சென்னை அணி (Hindustan University, Chennai) உள்ளிட்ட 12 அணிகள் கலந்து கொண்டனர்.
இதில், கால் இறுதி போட்டியில் முன்னேறி, அரையிறுதி போட்டியில், ரைசிங் ஸ்டார் சென்னை அணியும், கேரளா மின்சார வாரியம் அணியும் மோதியது. இதில், கேரளா மின்சார வாரியம் அணி, 72-49 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதேபோன்று, ஈஸ்டன் ரயில்வே கொல்கத்தா அணியுடன், சவுத் சென்ட்ரல் ரயில்வே செகந்திராபாத் அணி மோதியதில், ஈஸ்டன் ரயில்வே கொல்கத்தா அணி 87-82 புள்ளிகள் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதையும் படிங்க: "ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவது கண்டனத்திற்குரியது" - அமைச்சர் சிவசங்கர்!