தமிழ்நாடு

tamil nadu

செப்டம்பரில் குழந்தை.. ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 4:05 PM IST

Deepika Padukone pregnancy: பாலிவுட் பிரபலங்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஜோடி, தங்களுக்கு குழந்தை பிறக்க உள்ள செய்தியை இன்று அவர்களது இன்ஸ்டாகிராம் பதிவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

செப்டம்பரில் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் ரன்வீர் சிங்
செப்டம்பரில் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் ரன்வீர் சிங்

சென்னை:பாலிவுட் ஜோடியான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன், தங்களுக்கு குழந்தை பிறக்க உள்ள செய்தியை அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தளத்தில் இன்று (பிப்.29) அறிவித்துள்ளனர்.

2024ஆம் ஆண்டில் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் ஜோடிகளின் பட்டியலில் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இடம்பெற்றுள்ள செய்தி அவர்களது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2007ஆம் ஆண்டு ‘ஓம் சாந்தி ஓம்’ திரைப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமான தீபிகா படுகோன், தற்போது முக்கிய முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

ரன்வீர் சிங் உடன் இவர் இணைந்து நடித்து 2013ஆம் ஆண்டு வெளியான ராம் லீலா படம், பெரும் வெற்றியைக் கண்டது. இதையடுத்து ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 2018ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், திருமணமாகி தற்போது 6 ஆண்டுகளுக்குப் பின், இருவரும் தங்களுக்கு குழந்தை பிறக்க உள்ளதாக தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த பதிவில் குழந்தையின் உடைகள், காலணிகள் மற்றும் பொம்மைகளின் படங்களின் நடுவே, வரும் செப்டம்பர் மாதத்தில் குழந்தை பிறக்க உள்ள செய்தியை குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் கமெண்ட் செக்சனில் வாழ்த்து செய்தியுடன் குவிந்து வருகின்றனர்.

அவர் அடுத்ததாக, பிரபாஸுடன் கல்கி 2898 AD என்ற படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அமிதாப் பச்சன் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் இப்படம் மே 9, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க: வேட்டையன் படப்பிடிப்பு தீவிரம்: போலீஸ் உடையில் மிரட்டும் ரஜினிகாந்த்! ரசிகர்களுக்கு கையசைத்த வீடியோ வைரல்!

ABOUT THE AUTHOR

...view details