தமிழ்நாடு

tamil nadu

மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது களப்பணியாற்றிய ரசிகர்களுக்கு விருந்தளித்த நடிகர் சூர்யா!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 10:45 PM IST

Actor Surya: மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதி கன மழையின் போது களப்பணியில் ஈடுபட்ட சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து நடிகர் சூர்யா விருந்தளித்துள்ளார்.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா

சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த அதி கன மழையால் மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால், பொது மக்கள் தங்களது வீடு உள்ளிட்ட உடைமைகளை இழந்து தவித்தனர்.

அந்த வேளையில், தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த அத்தியாவசியப் பொருட்களை அம்மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து முடிந்த உதவிகளைச் செய்து வந்தனர். அந்த வகையில், நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களை வழங்கி களப்பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அவரது ரசிகர்களின் இச்செயலைப் பாராட்டும் விதமாக அவர்களை அழைத்து நடிகர் சூர்யா விருந்து அளித்துள்ளார்.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் களப்பணியாற்றிய ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து களப்பணியாற்றிய சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகள் என 10 பேரை நேரில் அழைத்து அவர்களை நடிகர் சூர்யா பாராட்டி ஊக்கப்படுத்தி உள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அவர்களுக்குச் சைவ விருந்தும் அளித்துள்ளார். மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் திருமணம் ஆன 50 நிர்வாகிகளை அவர்களின் குடும்பத்துடன் நேரில் அழைத்து விருந்து அளித்துள்ளார். அதோடு அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு தனது மகிழ்ச்சியை நடிகர் சூர்யா வெளிப்படுத்தி உள்ளார்.

இதையும் படிங்க:மயிலாடுதுறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. என்னென்ன திட்டங்கள் தொடங்கப்படுகிறது?

ABOUT THE AUTHOR

...view details