தமிழ்நாடு

tamil nadu

தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐபிஎஸ் அதிகாரியின் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 5:22 PM IST

Updated : Feb 6, 2024, 5:26 PM IST

MS Dhoni: கிரிக்கெட் வீரர் தோனி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாட்கள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

உயர்நீதிமன்றம் விதித்த 15 நாட்கள் சிறை தண்டனை தடை செய்துள்ள உச்சநீதிமன்றம்
தோனி மீதான அவதூறு வழக்கு

டெல்லி:கடந்த ஆண்டு டிசம்பரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இன்று (பிப். 5) இடைக்கால தடை விதித்து உள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சூதாட்ட புகார் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சூதாட்ட விவகாரத்தில் தோனிக்கு தொடர்பு இருப்பதாக தனியார் தொலைகாட்சியில் நடந்த விவாதத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தனது புகழுக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் மற்றும் தனியார் தொலைகாட்சி நிறுவனம் அவதூறு பரப்புவதாகவும், 100 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் கடந்த 2014ஆம் ஆண்டு தோனி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் தேதி எம்.எஸ். தோனிக்கு எதிராக எந்த கருத்தையும் ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமார் வெளியிடக் கூடாது என உத்தரவிட்டது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி சூதாட்ட மோசடி வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார், உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை முடிவில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி அவருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்ததோடு மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் தற்போது ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய 15 நாட்கள் சிறைத் தண்டனைக்கு இடைக்கா தடை விதித்து தீர்ப்பு வழங்கினர். மேலும் இந்த வழக்கில் கிரிக்கெட் வீரர் தோனி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: தோனி மீதான அவதூறு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை!

Last Updated :Feb 6, 2024, 5:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details