தமிழ்நாடு

tamil nadu

கடற்கரையோர வியாபார தம்பதியின் 3 வயது பெண் குழந்தை கடத்தல்..? புதுச்சேரியில் பரபரப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 11:05 PM IST

girl child kidnapping: புதுச்சேரி அருகே 3 வயது பெண் குழந்தையை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

narikuravar-couple-3-years-girl-child-missing-in-pondicherry
நரிக்குறவர் தம்பதியின் 3 வயது பெண் குழந்தை கடத்தல்

குழந்தையின் பெற்றோர் போட்டி

புதுச்சேரி:புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் முத்துப்பாண்டி- விஜயலட்சுமி தம்ப தம்பதியினர். இவர்களுக்கு 3 வயதில் சனல்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் புதுச்சேரி கடற்கரை சாலை அருகே பொம்மை, பலூன் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் புதுச்சேரி கடற்கரைச் சாலை அருகே பொம்மை விற்பனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது பெற்றோரின் அருகில் குழந்தை சனல்யா விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 8:00 மணியளவில் திடீரென அந்த குழந்தை மாயமானது.

இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் கடற்கரையில் பல இடங்களில் அலைந்து தேடியுள்ளனர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் பெரியக்கடை காவல் நிலையத்தில் குழந்தையை யாரோ கடத்தி சென்றுள்ளதாகப் புகார் அளித்தனர்.

அந்த தகவலின் பேரில் போலீசார் கடற்கரை சாலை உள்ளிட்ட பல இடங்களில் குழந்தையைத் தேடி சென்றுள்ளனர், ஆனால் குழந்தை கிடைக்கவில்லை. இதனையடுத்து கடற்கரைச் சாலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குழந்தையை மீட்டுத் தருமாறு கண்ணீருடன் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 3 வயதுக் குழந்தை விளையாடிக் கொண்டும் இருக்கும் போது மர்ம நபர்கள் கடத்தி சென்றதாகக் கூறப்படும் சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:எம்.எஸ்.சுவாமிநாதன் வாழும் போதே பாரத ரத்னா வழங்கியிருக்க வேண்டும் - சௌமியா சுவாமிநாதன்

ABOUT THE AUTHOR

...view details