தமிழ்நாடு

tamil nadu

கர்நாடக துணை முதலமைச்சர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்..! காரணம் என்ன..?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 12:59 PM IST

DK Shivakumar: பாஜக பிரமுகர் குறித்த சமூக வலைத்தள பதிவு காரணமாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மீது எப்ஐஆர் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Karnataka Court Directs to Cops To File FIR Against DK Shivakumar
டி.கே.சிவக்குமார்

பெங்களூரு (கர்நாடகா):கர்நாடகா மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜேந்திரா மற்றும் பிற பிரமுகர்களுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பதிவிற்காக கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், கார்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான டி.கே.சிவக்குமார் மீது எப்ஐஆர் பதிவு செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த ஜனவரி மாதம் 60 வயதான இந்து ஆர்வலர் ஸ்ரீகாந்த் பூஜாரி என்பவரை 31 ஆண்டு வழக்கு தொடர்பாக ஹூப்ளி போலீசார் கைது செய்தனர். இந்த கைதிற்கு கண்டனம் தெரிவித்து மாநில பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜேந்திரா, முன்னாள் அமைச்சர்கள் சுனில் குமார், கே.எஸ்.ஈஸ்வரப்பா, எம்பி பிரதாப் சிம்ஹா, சி.டி.ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், “நான் கரசேவகர், என்னை கைது செய்யுங்கள்” என பதாகைகளை ஏந்திச் சென்றனர். இந்த புகைப்படங்களைப் பயன்படுத்தி, அதில் விஜேந்திரர் கையில் இருந்த பதாகையில், “ஆர்டிஜிஎஸ் மூலம் ரூ.40 ஆயிரம் கோடி லஞ்சம் வாங்கியுள்ளேன், என்னை கைது செய்யுங்கள்” என மாற்றம் செய்து பதிவிட்டிருந்துள்ளனர்.

இந்த பதிவை ஆயிரக்கணக்காணோர் பார்த்துள்ளனர். இவர்கள் தொடர்ந்து இதே செயல்களில் ஈடுபடுவார்கள். எனவே துணை முதலமைச்சரும், காங்கிரஸ் மாநிலத் தலைவருமான டி.கே.சிவக்குமார் மற்றும் சமூக ஊடக தலைவர் (Social media head) பிஆர் நாயுடு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சட்டப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் யோகேந்திர ஹொடகட்டா (Yogendra Hodaghatta) நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த 42வது கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் (Additional Chief Metropolitan Magistrate) துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மீது எப்ஐஆர் பதிவு செய்யுமாறும் ஹைகிரவுண்ட் ஸ்டேஷன் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். பாஜக பிரமுகருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட சமுக வலைத்தள பதிவினால் கர்நாடக முதலமைச்சர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "எல்.முருகனிடம் பேசியதன் விளைவை டி.ஆர்.பாலு சந்திப்பார்" - அண்ணாமலை தகவல்

ABOUT THE AUTHOR

...view details