தமிழ்நாடு

tamil nadu

பிளாஸ்டிக்கிற்கு குட் பை சொல்லும் துணிப்பை ஏ.டி.எம்.. புதுவை அரசின் புதிய முயற்சி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 6:32 PM IST

Puducherry cloth bag ATM: புதுச்சேரியில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை குறைக்கவும் துணிப்பை பயண்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள துணிப்பை ஏடிஎம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

புதுச்சேரியில் துணிப்பை ஏடிஎம்
புதுச்சேரியில் துணிப்பை ஏடிஎம்

புதுச்சேரி:புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. அதன்படி பாலித்தீன் பைகள், பிளாஸ்டிகள் கப், தெர்மாகோல் தட்டுகள், தண்ணீர் பாக்கெட், உள்ளிட்ட பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யக் கூடாது எனவும் கூறப்பட்டிருந்தது.

இருப்பினும், புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் பொருட்கள் விற்பனையைத் தடுக்க சுற்றுச்சூழல் துறை, உள்ளாட்சி, வருவாய், உணவு பாதுகாப்புத்துறை, தொழிலாளர் துறை அடங்கிய ஒருங்கிணைந்த ஆய்வு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசு சார்பில் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு, தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களைப் பதுக்கி கடைகளில் விற்பனை செய்யப்படுவதை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனை படிப்படியாகக் குறைக்கும் நோக்கில் அரசு முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறது.

அதன் முதற்கட்டமாகப் புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தைக்குக் காய்கறிகள் வாங்க வரும் மக்களைக் கவரும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையில் புதுச்சேரி அரசு மாசுக்கட்டுப்பாட்டுக் குழுமம் சார்பில் உழவர் சந்தையில் துணிபை வழங்கும் ஏடிஎம்மை நிறுவியுள்ளது.

இதையும் படிங்க:தொப்பூரில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து...3 பேர் உயிரிழப்பு! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

இந்த இயந்திரத்தில் 10 ரூபாய் நோட்டைச் செலுத்தினால், துணிப்பை ஒன்றை இயந்திரம் நமக்கு அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது உழவர் சந்தையில் காய்கறி வாங்க வரும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமத்தின் நோக்கமாகப் புதுச்சேரி அரசு பிளாஸ்டிக் இல்லா உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலும், மக்கள் பாரம்பரிய முறைப்படி துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல விழிப்புணர்வை நடத்தி வருகிறது.

இந்நிலையில், முதற்கட்டமாக உழவர் சந்தையில் வைத்துள்ள துணிப்பை இயந்திரம் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மோதல்; போர்க்களமான விழுப்புரம் பேருந்து நிலையம்!

ABOUT THE AUTHOR

...view details