தமிழ்நாடு

tamil nadu

கர்நாடகாவில் தலை விரித்தாடும் தண்ணீர் பற்றாக்குறை! மூடு நிலையை எதிர்கொள்ளும் தொழில்நிறுவனங்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 12:52 PM IST

Updated : Mar 10, 2024, 1:02 PM IST

Bengaluru water crisis: கடும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெங்களூரு பீன்யா தொழிற்பேட்டை உடனடியாக மூடப்பட்டும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

Bengaluru water Crisis
Bengaluru water Crisis

பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பீன்யா தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்கள் மூடும் தருவாய்க்கு தள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பீன்யா தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் சப்ளை 60 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பீன்யா தொழிற்பேட்டையில் உள்ள ஏறத்தாழ 16 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மற்றும் அதில் பணியாற்றி வரும் 12 லட்சம் ஊழியர்கள் கடும் பாதிப்புக்குள்ளாவதாக தொழிற்துறை சங்கம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து பேசிய பீன்யா தொழிற்சங்க தலைவர் ஆரிப், தொழிற்பேட்டையில் உள்ள ஆழ்துளை கிணற்றில் கன உலோக தாதுக்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அரசு அந்த ஆழ்துளை கிணறுகளை மூடியது.

காவிரி நீரை மட்டுமே தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்கள் நம்பி இருக்கும் நிலையில், தற்போது காவிரி நீர் சப்ளையும் நிறுத்தப்பட்டு உள்ளது. இதே சூழல் நிலவினால் தொழிற்பேட்டையில் உள்ள பெருவாரியான நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும் என அவர் தெரிவித்து உள்ளார்.

பெங்களூருவில் உள்ள மிகப் பெரிய தொழிற்துறை பகுதியாக கருதப்படும் பீன்யா தொழிற்பேட்டை தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக 50 சதவீத தொழிற்சாலைகள் ஸ்தம்பித்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. குடிநீர் பற்றாக்குறையை போக்க அரசு கவனம் செலுத்தி வரும் நிலையில், தொழிற்சாலைகளுக்கு வழங்கும் நீரை 60 சதவீதமாக குறைத்து உள்ளது. மேலும், பெரும்பாலான ஆழ்துளை கிணறுகள் வறண்டு போனதால் தொழிற்சாலைகள் கடும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. கடும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பள்ளிகள் முழு ஆண்டு தேர்வை வேகமாக நடத்தி விரைந்து விடுமுறை அளிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. தற்போது கடும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தொழில்துறை நிறுவனங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

இதையும் படிங்க :யூடியூப்பை குறிவைக்கும் எலான் மஸ்க்! எக்ஸ் தளத்தில் புது வசதிகள் அறிமுகம் செய்ய திட்டம்!

Last Updated :Mar 10, 2024, 1:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details