தமிழ்நாடு

tamil nadu

சத்தீஸ்கரில் நிகழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 9 பேர் பலி; 23 பேர் படுகாயம்! - chhattisgarh accident

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 12:52 PM IST

Bemetara Accident: சத்தீஸ்கரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், 5 பெண்கள் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சத்தீஸ்கர் விபத்து
chhattisgarh accident

சத்தீஸ்கர்: பெமேதரா மாவட்டத்தில் சரக்கு வாகனம் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாயுள்ளது. இந்த விபத்தில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த 23 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பெமேதரா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பெமேதரா மாவட்டத்தில், பத்தரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குடும்ப நிகழ்ச்சிக்காக திராய்யா கிராமத்திற்கு சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்த வீடு திரும்பியவர்கள், கத்தியா பகுதியில் வந்துக்கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த 5 பெண்கள் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 23 பேர்படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், விபத்தில் படுகாயமாடைந்தவர்களை மீட்டு பெமேதாரா மாவட்ட மருத்துவமனை மற்றும் சிம்காவின் சமூக சுகாதார மையம் ஆகியவற்றிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், விபத்து குறித்து தகவல் அறிந்த பெமேதரா மாவட்ட ஆட்சியர் ரன்வீர் சர்மா, எம்எல்ஏ தீபேஷ் சாஹு, எஸ்பி ராமகிருஷ்ண சாஹு ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பெமேதரா ஆட்சியர் ரன்வீர் சர்மா, “விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் பெமேதரா மாவட்ட மருத்துவமனை, சிம்கா மருத்துவமனை மற்றும் எய்ம்ஸ் ராய்ப்பூர் ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவரிடம் உரிய சிகிச்சை அளிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு, பிரேத பரிசோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க:தக்காளி சாஸில் நெழிந்த புழுக்கள்.. நடிகர் விஜய் விஷ்வா ஆவேசம் - வீடியோ வைரல் - Actor Vijay Vishwa

ABOUT THE AUTHOR

...view details