சொத்து வரி உயர்வை ரத்து செய்யக்கோரி மதுரை மாநகராட்சி ஆணையரிடம் மனு

By

Published : Apr 28, 2022, 6:31 PM IST

thumbnail

மதுரை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 25% முதல் 150% வரை உயர்த்தியுள்ள சொத்துவரியை ரத்து செய்ய கோரி, மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சரவணன் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு வழங்கினார். இது குறித்து பேசிய அவர், 'தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இந்த வரி உயர்வு சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. எனவே, இதனைத் திரும்பப் பெற வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும், மாநகராட்சி ஆணையர் அவர்களிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.

TAGGED:

Madurai News

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.