ETV Bharat / state

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் மரணம்

author img

By

Published : Oct 2, 2021, 1:48 PM IST

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து
இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து

சிவகாசியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விருதுநகர்: சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன். இவர் சிவகாசி அருகே உள்ள வடமலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்துவந்தார்.

இந்த நிலையில் இன்று (அக். 2) சிவகாசி விருதுநகர் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது லாரி ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தத் தகவலறிந்து விரைந்துவந்த சிவகாசி நகர் காவல் துறையினர் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய நாமக்கல்லைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முருகேசனை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க : நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.