ETV Bharat / state

செயின் திருட்டில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை பிடித்த பொதுமக்கள்!

author img

By

Published : Sep 12, 2019, 6:56 PM IST

விருதுநகர்: ராஜபாளையம் அருகே கொலுசுக்கு பாலிஷ் போடுவதாகக் கூறி தங்கச் செயினை பறித்துச் சென்ற வடமாநில இளைஞரை, பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

செயின் திருட்டு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணிடம் கடந்த வாரம் வடமாநில இளைஞர் ஒருவர் கொலுசுக்கு பாலிஷ் போடுவதாகக் கூறினார். இதை நம்பிய அந்த பெண், தனது கொலுசை கொடுத்துள்ளார். பின்னர், பாலிஷ் போட்டு முடித்த பின், தங்களுடைய தங்கச் செயினில் அழுக்கு இருக்கிறது, அதையும் கழற்றிக் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து செயினை கழற்றிக் கொடுத்த ராஜேஸ்வரி, கொலுசை வீட்டில் வைக்க உள்ளே சென்றபோது, அந்த இளைஞர் தங்கச் செயினுடன் தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பாக ராஜபாளையம் வடக்கு காவல் நிலைத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே, அந்த இளைஞர் ராஜபாளையம் குமரன் தெருவில் சுற்றித் திரிந்ததை பார்த்த ராஜேஸ்வரி, அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளார்.

செயின் திருட்டு

அதன்பின், அப்பகுதி மக்கள் அனைவரும் சேர்ந்து அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுபற்றி, வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த இளைஞர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மண்ணுகுமார் என்பது தெரியவந்தது.

Intro:விருதுநகர்
12-09-19

தங்கச் செயினை பறித்துச் சென்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து அடி உதை

Tn_vnr_02_North_Indian_cheating_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆணையூர் தெருவில் கொலுசு பாலிஷ் போடுவதாக கூறி தங்கச் செயினை பறித்துச் சென்ற பீகாரை மாநிலத்தை சேர்ந்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆணையூர் தெருவைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணிடம் கடந்த வாரம் வடமாநில இளைஞர் ஒருவர் கொலுசு பாலிஷ் போடுவதாக கூறி பாலீஷ் போட்டு முடித்த பின் உங்களுடைய தங்கச் செயினில் அழுக்கு இருக்கிறது அதையும் கழற்றி கொடுங்கள் என கூறி ஒன்றரை பவுன் தங்க செயினை வாங்கி அழுக்கு எடுத்து கொடுப்பதாக கூறியுள்ளார் இதை நம்பிய ராஜேஸ்வரி செயினை கழற்றி கொடுத்துவிட்டு கொலுசை எடுத்து கொண்டு வீட்டில் உள்ளே சென்றுள்ளார் அது சமயம் அந்த வடமாநில இளைஞர் தங்கச் செயினுடன் தப்பி ஓடியுள்ளார் இது சம்பந்தமாக இராஜபாளையம் வடக்கு காவல் நிலைத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் அந்த இளைஞர் இராஜபாளையம் குமரன் தெரு பகுதியில் சுற்றித்திரிந்ததை பார்த்த ராஜேஸ்வரி அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளார் அப்பகுதி மக்கள் அனைவரும் சேர்ந்து அந்த இளைஞரை பிடித்து அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்ததில் அந்த இளைஞர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மண்ணு குமார்  என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது மேலும் வேறு ஏதும்  குற்றச் சம்பவங்களில் அந்த இளைஞர் ஈடுபட்டுள்ளாரா   என்று போலீஸ் சார்   விசாரணை செய்து வருகின்றனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.