விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களை பிரித்து அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது.
வேளாண் விற்பனைக் குடோனில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு, விவிபேட் இயந்திரங்களை சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கணினி முறையில் பிரித்து, அந்தந்த சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணன், தேர்தல் ஆணையம் வழங்கிய பதிவு எண் முறைப்படி வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிபார்த்து தனித்தனியாக பிரித்து தொகுதிவாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைத்தார்.
அதன் பின்னர் ஒவ்வொருவரும் தங்கள் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை லாரிகள் மூலம் எடுத்து சென்றனர்.
இதையும் படிங்க : கொடைக்கானலில் அலைமோதும் சுற்றூலாப் பயணிகள் கூட்டம்!