ETV Bharat / state

குடும்பத் தகராறில் ஏற்பட்ட மோதல்- ஒருவர் உயிரிழப்பு!

author img

By

Published : Oct 16, 2020, 2:30 PM IST

விருதுநகர்: ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கனிராஜ்
கனிராஜ்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் அழகேந்திரன். இவருக்கும், இவரது மனைவி சுகந்தியின் அண்ணனான விவசாயி கனிராஜுக்கும் (45) இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று (அக்.15) வழக்கம்போல் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலில் முடிந்தது. அப்போது அழகேந்திரன் தள்ளிவிட்டதில் தலையில் காயம் ஏற்பட்டு, கனிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உயிரிழப்புக்கு காரணமான அழகேந்திரனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: விருதுநகரில் ஆசிரியையிடம் 5 பவுன் தாலி செயின் பறிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.