ETV Bharat / state

விருதுநகரில் கண்மாயில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு!

author img

By

Published : Mar 6, 2021, 9:34 PM IST

விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூரில் வீட்டருகே விளையாடிய சிறுவன், கண்மாயில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

DEATH
சிறுவன் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சமத்துவபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் கருப்பசாமி. இவரின் மகன் பிரதீப்(9), வீட்டருகே உள்ள பெரியகுளம் கண்மாயில் விளையாடிக்கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கியுள்ளார்். இதனையடுத்து சிறுவனை மீட்ட குடும்பத்தினர், ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்துக்கொள்வதாகக்கூறி, சிறுவனைத் தூக்கிச் சென்றுள்ளனர். அங்கிருந்த காவல் துறையினர், அவர்களை மறித்து சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டதாகவும், உடற்கூராய்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.இதனையடுத்து மீண்டும் சிறுவன் உடலை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: முட்புதரில் நாட்டுத்துப்பாக்கியை மறைத்து வைத்த விவசாயி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.