ETV Bharat / state

சாலையை ஆக்கிரமித்து திமுகவினர் வைத்த பேனர்; நொந்துபோய் பொம்மைக்கு சவுக்கடி கொடுத்த சமூக ஆர்வலர்

author img

By

Published : Oct 3, 2022, 7:20 PM IST

விழுப்புரம் வளவனூரில், பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து பேனர் வைத்துள்ளதற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி, தலையில்லா உருவ பொம்மையை சமூக ஆர்வலர் ஒருவர் சாட்டையால் அடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சாலையை ஆக்கரமித்து பேனர்; நடவடிக்கை எடுக்கக்கோரி நூதன முறையில் கோரிக்கை விடுத்த நபர்
சாலையை ஆக்கரமித்து பேனர்; தலையில்லா உருவ பொம்மையை அடித்து நூதன கோரிக்கை

விழுப்புரம்: வளவனூரில், தலையில்லா உருவ பொம்மையை சமூக ஆர்வலர் பிரகாஷ் என்பவர் சாட்டையால் அடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப்பரவி வருகிறது.

இந்த வீடியோவில் அவர், பேருந்து நிலையத்தைச்சுற்றி விதிகளை மீறி, சாலையை ஆக்கிரமித்து, ஆளுங்கட்சி எம்எல்ஏ ஆதரவாளர்கள் பேனர் வைத்ததாகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டி தலையில்லாத உருவபொம்மை ஒன்றை சாட்டையால் அடிக்கிறார்.

சாலையை ஆக்கிரமித்து திமுகவினர் வைத்த பேனர்; நொந்துபோய் பொம்மைக்கு சவுக்கடி கொடுத்த சமூக ஆர்வலர்

உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு டிஜிபி பார்வைக்குச் செல்லும் வரை பகிருங்கள் எனவும் அந்த வீடியோவில் சமூக ஆர்வலர் பிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: இந்த ஒரு தடவை மன்னிச்சிக்கோங்க.. சென்னை சிறுவனின் வைரல் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.