ETV Bharat / state

3 மாதக் குழந்தைக்கு பாலில் விஷம் கலந்துகொடுத்த தாய் கைது!

author img

By

Published : Oct 9, 2020, 3:34 PM IST

விழுப்புரம் : குடும்ப வறுமை காரணமாக மூன்று மாத பெண் குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

3 மாத குழந்தைக்கு பாலில் விஷம் கலந்துகொடுத்த தாய் கைது!
3 மாத குழந்தைக்கு பாலில் விஷம் கலந்துகொடுத்த தாய் கைது!

விழுப்புரம் அருகேயுள்ள பாப்பான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சாதிக்பாஷா (வயது 32). இவரது மனைவி யாஸ்மின் (வயது 29). இவர்களுக்கு ஒரு ஆண், இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி இரவு தனது மூன்று மாத பெண் குழந்தைக்கு வழக்கம்போல் யாஸ்மின் பால் கொடுத்து உறங்க வைத்துள்ளார். மறுநாள் காலையில், குழந்தை மயக்க நிலையில் இருந்துள்ளது.

இதையடுத்து குழந்தையை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் தனது குழந்தையின் மரணம் குறித்து சந்தேகமடைந்த சாதிக் பாஷா, இது குறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் காவல் துறையினர் யாஸ்மினிடம் விசாரணை நடத்தினர். மேலும் உடற்கூறு பரிசோதனையில் குழந்தைக்கு கொடுக்கப்பட்ட பாலில் விஷம் கலந்திருந்ததை உறுதிப்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து யாஸ்மினிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தனியார் பேருந்து நடத்துநராக இருந்து வந்த தனது கணவருக்கு தற்போது வேலைவாய்ப்பு ஏதும் இல்லாததால் போதிய வருமானமின்றி தாங்கள் தவித்து வந்ததாகவும், இதனால் குழந்தைக்கு பாலில் பூச்சி மருந்து கலந்து கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் யாஸ்மினைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க...கணவருடன் செல்ல எம்எல்ஏ மனைவிக்கு நீதிமன்றம் அனுமதி...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.