ETV Bharat / state

மர்மமான முறையில் பெண் உயரிழிப்பு!

author img

By

Published : Jun 28, 2019, 7:56 AM IST

Updated : Jun 28, 2019, 1:24 PM IST

விழுப்புரம்: திருக்கோவிலூர் அடுத்த சின்னலூர் கிராமத்தில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

விழுப்புரம் காவல்துறை

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட சின்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி(45). இவர் சின்னலூர் கிராமத்தில் உள்ள பாடிப்பள்ளம் காப்புகாட்டு பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இவரது சடலத்தைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், லட்சுமி எவ்வாறு உயிரிழந்தார் என்பதை தெரிந்துகொள்வதற்காக தடயவியல் நிபுணர்களை வரவழைத்தனர். பின், அவர்கள் பரிசோதனை செய்ததில், லட்சுமியின் கழுத்தை யாரோ நெறித்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

மர்மமான முறையில் பெண் உயரிழிப்பு!

இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் லட்சுமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், லட்சுமியின் கணவர் கணேசன், உறவினர்கள் ஆகிய மூன்று பேருடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:Body:

villupuram lady death


Conclusion:
Last Updated : Jun 28, 2019, 1:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.