ETV Bharat / state

கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து

author img

By

Published : Jul 28, 2022, 5:03 PM IST

விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து
கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து

விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு சாலையில் நேற்று (ஜூலை 27) மாலை 4 மணியளவில் டிராக்டர் ஒன்று கரும்புகளை ஏற்றிக்கொண்டு வந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் அருகே இருந்த மருத்துவமனை சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அருகே பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துக்காக காத்திருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல் துறையினர் போக்குவரத்து பாதிப்பை சரிசெய்தனர். டிராக்டர் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்தவர் ஈரோட்டில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.