ETV Bharat / state

கள்ளத்தனமாக மது விற்ற 3 இளைஞர்கள் கைது!

author img

By

Published : Aug 8, 2020, 3:15 PM IST

விழுப்புரம்: வளவனூர் அருகே கள்ளத்தனமாக மது விற்பனை செய்த மூவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

3 youngsters arrested for smuggling alcohol in villupuram
3 youngsters arrested for smuggling alcohol in villupuram

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகேயுள்ள குமார குப்பம் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வளவனூர் காவல் துறையினர் நேற்றிரவு(ஆக.7) அந்த பகுதியில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த மணி, மலையப்பன், பிரசாந்த் ஆகிய மூன்று பேர் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து, 180 லிட்டர் சாராயம் மற்றும் 18 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.