வேலூர் மாவட்டம் திருவலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 13 வயது 7ஆம் வகுப்பு மாணவிக்கு அதே பள்ளியை ஆங்கில ஆசிரியர் தொடர் பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார். இதனால் மன உழைச்சல் அடைந்த மாணவி தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை பெற்றோர் மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
அப்போது மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இதனிடையே வழக்கில் தொடர்புடைய ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் மாவட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முனுசாமி அனுப்பிய சுற்றறிக்கையில், "வேலூர் மாவட்ட அரசு பள்ளிகளில், பாலியல் தொடர்பான சம்பவங்கள் நடக்காத வண்ணம் தலைமை ஆசிரியர்கள் பார்த்துகொள்ள வேண்டும்.
குறிப்பாக இதுபோன்று சம்பவங்கள் நடந்துவருகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுகுறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் மீது இதுபோன்ற புகார்கள் எழுந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கஞ்சா வேட்டையை தொடங்க வேண்டும்-காவல் துறைக்கு டிஜிபி உத்தரவு