வேலூர்: வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் கடந்த 5ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மையம், வலுவடைந்து இரண்டு நாள்களுக்கு முன் புயலாக உருப்பெற்றுது. மாண்டஸ் என பெயரிடப்பட்ட இந்த புயல், இன்று (டிச.10) அதிகாலை 3 மணி அளவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. மேலும் புயல் வலுவிழந்து குறைந்தபட்ச காற்றழுத்த தாழ்வு மையமாக மாறியது.
புயல் கரையைக் கடந்து உள்ளதால் தற்போது பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக சேதாரம் ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
இதில், மாங்காய் மண்டி பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த குமாரவேல் பாண்டியன், அப்பகுதியில் தேங்கி இருக்கும் மழை நீரை உடனடியாக சரி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.