ETV Bharat / state

சந்தன கட்டை கடத்தல்: ஒருவர் கைது.. இன்னொருவர் தப்பியோட்டம்!

author img

By

Published : Dec 30, 2022, 5:35 PM IST

வேலூரில் இருசக்கர வாகனத்தில் வைத்து 20 கிலோ சந்தன கட்டை கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

20 கிலோ சந்தன கட்டை கடத்தல்
20 கிலோ சந்தன கட்டை கடத்தல்

வேலூர்: அண்ணா சாலையில் உள்ள லட்சுமி திரையரங்கம் அருகே வேலூர் தெற்கு காவல் துறையினர் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சோதனை செய்ததில், அவர்களிடம் சந்தன மரக் கட்டைகள், கத்தி, வாள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து மணிகண்டன் என்பவர் தப்பியோடிய நிலையில், சந்தன மரக்கட்டைகளை கடத்தி வந்த திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியினைச் சேர்ந்த ராஜசேகரன்(28), என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து சுமார் 20 கிலோ சந்தன மரக் கட்டை, இருசக்கர வாகனம், கத்தி, வாள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த வேலூர் தெற்கு காவல் துறையினர் இதனை வேலூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

மேலும் தப்பி ஓடிய மணிகண்டனை தேடி வருகின்றனர். விசாரணையில் இவர்கள் காட்பாடியை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து சந்தன மரக்கட்டைகளை வெட்டி கடத்திச்சென்றது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: ஹீராபென் மோடி மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.