ETV Bharat / state

நதிகளை நாம் தெய்வமாக வணங்க வேண்டும் - ஆளுநர் ஆர்.என். ரவி

author img

By

Published : Jun 29, 2022, 6:46 PM IST

'நதிகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நதிகளை நாம் தெய்வமாக வணங்க வேண்டும். அப்போதுதான் அவைகளைப் பாதுகாக்க முடியும்' என வேலூரில் பாலாறு பெருவிழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவி

வேலூர்: அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் வேலூர் ஸ்ரீநாராயணி பீடம் ஒருங்கிணைந்து வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயண பீடத்தில் பாலாறு பெருவிழா இன்று (ஜூன் 29) நடைபெற்றது. இன்று முதல் ஐந்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் நாராயணி பீடத்தின் சக்தி அம்மா மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். ஐந்து நாள்கள் நடைபெறும் விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்நியாசிகள் பங்கேற்றுள்ளனர்.

விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “நதிகளை நாம் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நதிகளை நாம் தெய்வங்களாக வணங்க வேண்டும். 2016ஆம் ஆண்டில் பிரதமர் மோடி காற்றாலை மற்றும் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆரம்பத்தில் பல நாடுகள் ஆர்வம் காட்டவில்லை. தற்போது 100 நாடுகள் இந்தத் திட்டத்தில் இணைந்து இருக்கிறார்கள்.

2025ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட்ஸ் மரபுசாரா எரிசக்திக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், 2021 செப்டம்பர் மாதத்திலே அடைந்துவிட்டோம். இந்தியா 2030ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட் மின் உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சனாதனத்தின் மூலமே பூமியில் உள்ள அனைத்து விதமான உயிர்களையும் நதிகளையும் காப்பாற்ற முடியும்.

இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்கள். இது தான் சனாதன பூமி. இதனை ஒரு ஆதாரமாக பார்க்கக்கூடாது. அதை வணங்க வேண்டும். கால நிலை மாற்றம் உலகத்தில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அடுத்த 30-40 ஆண்டுகளுக்குள் சிறிய தீவுகள் நேரில் மூழ்கும் அபாயம் உள்ளது. கார்பன் வெளியேற்றத்தால் பலப் பிரச்னை ஏற்படுகிறது.

ஆளுநர் ஆர்.என். ரவி

என்னுடைய குழந்தைப் பருவத்தில் இருந்து நீரை வழிபட்டுள்ளேன். ஆதிகாலம் முதல் பஞ்ச பூதங்களை வணங்கி வருகிறோம். சிலப்பதிகாரத்தில் அரசன் கூட குளங்களை வெட்டிப் பாதுகாக்க வேண்டும் என இளங்கோவடிகள் சொன்னது போல ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்ரித் சரோவர் என்ற திட்டத்தை பிரதமர் செயல்படுத்தி வருகிறார். இந்தத் திட்டத்தின் மூலம் 2023 ஆகஸ்ட் மாதத்திற்குள் 50ஆயிரம் குளங்களை வெட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அடுத்து வரும் 25 ஆண்டுகள் மிக முக்கியமான ஆண்டுகள், 2047 ஏரியில் நாம் உலக நாடுகளுக்கு தலைமை நாடாகத் திகழ வேண்டும். அதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: திருப்பத்தூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.