ETV Bharat / state

மாண்டஸ் புயல் எதிரொலி:யாருக்கெல்லாம் பரீட்சை ஒத்திவைப்பு தெரியுமா?

author img

By

Published : Dec 8, 2022, 10:16 PM IST

மாண்டஸ் புயல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளுவர் பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைப்பு!
மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளுவர் பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

வேலூர்: மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் , திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டங்களில் வேலூர் திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கல்லூரிகளில் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ’மாண்டஸ் புயல்’ முன்னெச்சரிக்கைக் காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது எனவும், தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகங்களில் நடக்க இருக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

மேலும், 8 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளதால் நாளை(டிச.8) நடைபெறவுள்ள பட்டயத்தேர்வுகள்(டிப்ளமோ), வரும் 16ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீனவர்களுக்கு எச்சரிக்கை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - தூத்துக்குடி கலெக்டர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.