ETV Bharat / state

மாண்டஸ் புயல் தாக்கம்: அறுவடை நிலையில் இருந்த வாழைகள் சேதம்

author img

By

Published : Dec 10, 2022, 5:00 PM IST

Updated : Dec 10, 2022, 5:08 PM IST

வேலூர் அருகே மாண்டஸ் புயல் காரணமாக அறுவடை நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

மாண்டஸ் புயல் தாக்கம்: அறுவடை நிலையில் இருந்த வாழைகள் சேதம்
மாண்டஸ் புயல் தாக்கம்: அறுவடை நிலையில் இருந்த வாழைகள் சேதம்

மாண்டஸ் புயல் தாக்கம்: அறுவடை நிலையில் இருந்த வாழைகள் சேதம்

வேலூர்: மாண்டஸ் புயல் கரையைக் கடந்த பின் வேலூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து வருகிறது.

மேலும் மாண்டஸ் புயலின் காரணமாக வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதி மலை அடிவாரத்தில் அதிக அளவு மழை பெய்து வருவதால் மலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிங்கிரி கோவில் நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சிங்கரி கோவில் பகுதியில் அமைக்கப்பட்ட நீர்த்தேக்கம் முழுமையாக நிறைந்து மழைநீரானது வழிந்து ஓடுகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஆற்றோரம் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் அதிக காற்றின் காரணமாக வாழை மரங்கள் முறிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சிங்கிரி கோயில், கத்தாழம்பட்டு, கீழ்அரசம்பட்டு ஆகியப் பகுதிகளில் விவசாயிகள் வாழையை அதிகளவில் பயிரிட்டு வருகிறனர். இந்த நிலையில், மாண்டஸ் புயலின் காரணமாக வாழை மரங்கள் சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்கள், சிறிய கன்றுகள் என அனைத்தும் காற்றில் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: புயல்: காற்றின் வேகம் தாங்காமல் சரிந்து விழுந்த காவல்துறையின் செல்போன் டவர்

Last Updated :Dec 10, 2022, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.