ETV Bharat / state

திருச்சியில் விமான நிலையத்தில் கைப்பையில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம்!

author img

By

Published : Jun 21, 2023, 12:47 PM IST

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் பெண் கைப்பையில் மறைத்து கடத்தி வந்த 318 கிராம் எடை கொண்ட 5 உருளை வடிவிலான தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

tamil-nadu-state-trichy-rs-19-lakhs-worth-gold-plates-and-chain-seized-in-tiruchirapalli-international-airpoet
திருச்சி விமான நிலையத்தில் கைப்பையில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம்

திருச்சி: சர்வதேச விமான நிலையம், இந்தியாவில் உள்ள பழமையான விமான நிலையங்களில் ஒன்றாகும். இந்த விமான நிலையமானது இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பன்னாட்டு விமான நிலையங்களில் முதலிடத்தில் உள்ளது. திருச்சியில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட‌ முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. தமிழக அளவில் சென்னைக்கு அடுத்தபடியாக இந்த விமான நிலையம் உள்ளது.

விமானத்தில் வரும் பயணிகள் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தற்போது தினமும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று துபாயில் இருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் இலங்கை வழியாக திருச்சி வந்தடைந்தது. விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் சட்ட விரோதமாக தங்க கட்டிகளை கடத்தி வருவதாக, விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர். இந்த சோதனையில் சந்தேகத்திற்கிடமான ஆண் பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை மேற்கொண்ட போது, அதில் பெண்கள் பயன்படுத்தக் கூடிய கைப்பையில் மறைத்து 318 கிராம் எடை கொண்ட 5 உருளை வடிவிலான தங்கக் கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதன் மதிப்பு ரூபாய் 19 லட்சத்து 12 ஆயிரத்து 274 ஆகும் என அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கம் கடத்தலில் ஈடுபட்ட நபர் இதற்கு முன்பு கடத்தலில் ஈடுபட்டுள்ளனரா? பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா? வேறு வழக்குகள் ஏதேனும் அவர்கள் மீது உள்ளதா இவர்களுக்கு பின்புலமாக யார் செயல்படுகிறார்கள், எந்த நோக்கத்திற்காக தங்கங்களை சட்ட விரோதமாக கடத்திச் செல்கின்றனர் எனப் பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் சட்ட விரோதமாக தங்கம் கடத்தல், வெளிநாட்டு கரன்சிகள், பறவைகள், உயிரினங்கள் பேன்றவற்றை கடத்தி வரும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்ட விரோதமாக கடத்திவரப்படும் தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகள் உள்ளிட்ட பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தாலும் கூட பல்வேறு நபர்கள் கடத்தலில் ஈடுபட்டு வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

ஆகவே, கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது வருங்காலத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கையாக வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்: ஓலைச் சுவடிகளை கணினி மயமாக்கம் செய்யும் பணிகள் மும்முரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.