ETV Bharat / state

திருச்சி விமான நிலையத்தில் லேப்டாப் பேட்டரி மற்றும் ரூ.37 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

author img

By

Published : Jun 18, 2023, 12:41 PM IST

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு‌ ஸ்கூட் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணி ஒருவர் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

Rs.37 lakhs worth gold plates and chain seized in tiruchirapalli international airpoet
திருச்சி விமான நிலையத்தில் லேப்டாப் பேட்டரி மற்றும் ரூ.37 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

திருச்சி: விமான சேவையைப் பயன்படுத்தி வரும் பயணிகள், தங்கம் கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தற்போது தொடர் கதையாக இருந்து வருகிறது. அந்த வகையில், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், லேப்டாப் பேட்டரி மற்றும் உள்ளாடையில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட‌ நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் வரும் பயணிகள், நேற்று (ஜூன் 17ஆம் தேதி), சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு‌ ஸ்கூட் விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணி ஒருவர் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

ரகசியத் தகவலின் அடிப்படையில், ஸ்கூட் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை, விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் ஆண் பயணி ஒருவர் லேப்டாப் பேட்டரியில் மறைத்து வைத்து எடுத்து வந்த 440 கிராம் எடையுள்ள தங்கத் தகடுகள் மற்றும் உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த 185 எடையுள்ள தங்கச் சங்கிலி இருந்தது தெரியவந்தது.

கடத்தி வரப்பட்ட தங்கங்களை விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த எடை 625 கிராம் இதன் மதிப்பு ரூ. 37 லட்சத்து 59 ஆயிரத்து 375 ஆகும் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. தங்கத்தை பறிமுதல் செய்து அந்த நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கம் கடத்தலில் ஈடுபட்ட நபர் இதற்கு முன்பு கடத்தலில் ஈடுபட்டுள்ளாரா ? இவரின் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா ? வேறு வழக்குகள் ஏதும் உள்ளதா? இவர்களுக்கு பின்புலமாக யார் செயல்படுகிறார்கள்? எந்த நோக்கத்திற்காக தங்கத்தை, சட்ட விரோதமாக கடத்தி செல்கின்றனர் என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் வெளிநாட்டு கரன்சிகள் பறவைகள், உயிரினங்கள் கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தாலும் கடத்தலில் ஈடுபட்டு வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
ஆகவே, கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவர்கள் மீது, வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: சிபிஎம் கட்சி குறித்து அவதூறு; பாஜக நிர்வாகி சூர்யாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.